2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் வேன், சிறைச்சாலை பஸ் மோதியதில்; 16 பேர் பலி

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் ஹர்டெப் மாகாணம் மெரிண்டெல் நகரில் சிறைத்துறை பஸ்சில் பொலிஸார், கைதிகள் உள்பட 13 பேர் பயணித்தனர். அந்த பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது,   6 பொலிஸ் காரர்களுடன் வந்தகொண்டிருந்த பொலிஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிறைத்துறை பஸ் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 14 பொலிஸார் உள்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சனிக்கிழமை (30) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .