Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவை, குற்றவாளி (Criminal) என்று கூறிய மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் மன்னிப்பு கோரவேண்டும் என, தேசிய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான், சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போது, காஷ்மிர் விவகாரம் குறித்து உரையாற்றியிருந்தார்.
இதன்போது, காஷ்மிர் விவகாரத்தை ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் குறித்து விமர்சனம் செய்த சௌஹான், ஜவஹர்லால் நேருவை குற்றவாளி என்று விமர்சித்தார்.
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிவ்ராஜ் சிங் சௌஹானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago