2026 மே 09, சனிக்கிழமை

ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்களைக் குறிவைக்கும் உலக நாடுகள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவைப் பணிய வைப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 143 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள சொகுசு படகுகளை இத்தாலி கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஷ்ய-உஸ்பெக் வணிக ஜனாதிபதியான  அலிஷர் உஸ்மானோவின் வில்லாவும் வடக்கு சர்டினியாவில் உள்ள டோனி எமரால்டு கடற்கரைப்பகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினைப் பணிய வைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .