Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

லிபியக் கரையோரத்தில் 55 பேரைக் காவிச் சென்ற இறப்பர் படகொன்று கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உள்ளடங்கலாக குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணவில்லை.
வெள்ளிக்கிழமை (06) கப்பல் கவிழ்ந்ததாக அறிக்கையொன்றில் புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளையே படகு கொண்டிருந்ததாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
லிபியாவிலிருந்து வியாழக்கிழமை (05) புறப்பட்ட படகு ஆறு மணித்தியாலங்களில் மூழ்கியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago