Freelancer / 2026 மார்ச் 04 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.
லெபனான் அரசாங்கத்தின் அனர்த்த மேலாண்மைப் பிரிவின் தகவல்படி, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இருமடங்காக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, கடந்த 48 மணிநேரத்திற்குள் 58,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 50 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. (a)

53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago