Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து, “சந்திரயான்-2” விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இன்று (22) பிற்பகல் 2.43 மணியளவிலேயே, சந்திரயான் - 2 ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை, சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. அந்தத் திட்டம் வெற்றிப் பெற்றதையடுத்து, சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள, “சந்திரயான்-2” விண்கலத்தை அனுப்ப, இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.
இந்த விண்கலம், கடந்த 15ஆம் திகதி ஏவப்படவிந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையிலேயே, குறித்த விண்கலம், நேற்று ஏவப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளின் ஒருகட்டமாக, சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும் சாதனையாக, “சந்திரயான்-2” விண்கலம், விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது.
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago