Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாயமான இந்திய விமானம் பற்றியத் தகவல் வழங்குவோருக்கு, 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என, விமானப்படை அறிவித்துள்ளது.
விமானத்தை தேடும் பணிகளை, நேற்று (09), 7ஆவது நாளாக விமானப்படை முன்னடுத்த போதிலும், எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாயமான விமானம் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படுமென இந்திய விமான படையின் எயார் மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலம்- ஜோர்கத் விமானப்படை தளத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் கடந்த 4ஆம் திகதி, 13 பேருடன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago