2025 நவம்பர் 05, புதன்கிழமை

200 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தத்தில் 12 பேர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிமாச்சல் பிரதேசம், சம்பா பகுதியில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற வாகன விபத்தில், 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பா மாவட்டத்திலுள்ள பன்ச்புலா பகுதியிலுள்ள வீதியூடாகச் சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ், சாரதியின் கட்டுப்பாடை மீறி, 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்றதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த பிரதேச மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டதாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X