Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் மத்திய பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மழலையர் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவருக்கு சக ஆசிரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில் குழந்தைகள் சாப்பிடும் உணவில் வேதிப் பொருளை கலந்துள்ளார். இதனால் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 24 குழந்தைகள் பாதிக்கப்பட்டன.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அந்த பெண் ஆசிரியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சக ஆசிரியரை பழிவாங்குவதற்காக மாணவர்கள் சாப்பிடும் கச்சு உணவில் சோடியம் நைட்ரைட் கலந்துள்ளார். அதைக் குடித்ததும் அங்கிருந்த 25 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விஷத்தை எடுத்துக் கொண்டதால் கடந்த ஜனவரி 2020இல் ஒரு குழந்தைக்கு உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தர். மேலும், சுமார் 24 பேருக்கு மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago