Freelancer / 2023 நவம்பர் 07 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியின் "கால்விரல்" என்று அடிக்கடி வர்ணிக்கப்படும் கலாப்ரியா என்ற கிராமம் கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. கலாப்ரியா கிராமம் சில ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியுடன் போராடி வருகிறது. இது உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கலாப்ரியா நிர்வாகம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், இத்தாலியில் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
40 வயதுக்குள் இருக்க வேண்டும், கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன் வர வேண்டும். 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமப்பொருளாதாரம் சரிந்து வருவதை சமாளிக்க கலாப்ரியா நிர்வாகம் இது போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
23 minute ago