Mayu / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கண்ணன்குடா மகா வித்தியாலய அணி சம்பியன்.
கண்ணன்குடா மகா வித்தியாலய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கண்ணன்குடா மகா வித்தியாலயத்தின் அதிபர் ரீ. கரிகாலன் தலைமையில் கண்ணன்குடா மகா வித்தியாலய மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித் திருந்தார்.

மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிற்கிடையில் கிரிக்கெட் திறனை பரீட்சிப்பதற்கான களமாக இப் போட்டிகள் அமைந்திருந்தது.

15 வயது மாணவர்களுக்கான 10 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஏழு பாடசாலைகள் இப்போட்டித்தொடரில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்கொண்டிருந்தனர்.

கண்ணன்குடா மகா வித்தியாலய அணியினருக்கும் கரையாக்கன் தீவு விநாயர் பாடசாலை அணியினரிற்கும் இடையில் விறுவிறுப்பான இறுதிப் போட்டி இடம் பெற்றதில் கண்ணன்குடா பாடசாலை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி, 60 பந்துகளில் 06 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் கரையக்கன் தீவு பாடசால அணியினர் 6 விக்கட்டுக்களை இழந்து 60 பந்திற்கு முகம்கொடுத்து 94 ஒட்டங்களை பெற்று 30 ஓட்டங்களால் கண்ணன்குடா மகா வித்தியாலய அணியினர் வெற்றியினை தமதாக்கி கொண்டுள்ளனர்.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025