Shanmugan Murugavel / 2023 மார்ச் 15 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்ராஹிம்

அநூராதபுரம் அன்றுவ் குமாரகே உள்ளக விளையாட்டரங்கில் சோட்டோகான் கராத்தே டூ ஜப்பான் ஸ்கூல் ஏற்பாட்டில் அண்மையில் நடாத்தப்பட்ட 10ஆவது திறந்த கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கிழக்கு மாகாண யூ.எஸ்.கே.யூ. கராத்தே சங்கத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனை எஸ்.கே.எம்.எஸ். மாணவர்களும் கலந்துகொண்டு ஆண்களுக்கான சிரேஷ்ட, கனிஷ்ட பிரிவின் கீழ் பங்குபற்றி 11 தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள், ஏழு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 24 பதக்கங்களைப் பெற்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர்.
இப்போட்டியில் இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .