2025 நவம்பர் 19, புதன்கிழமை

கழகங்களுக்கிடையில் தாச்சிச் சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான தாச்சி விளையாட்டை 2016ஆம் ஆண்டு முதல் வடமாகாண விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்தவுள்ளதாக வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா  தெரிவித்தார்.

வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற 2016ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

'எமது பாரம்பரிய விளையாட்டு;களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு உண்டு. கடந்த 2 ஆண்டுகளாக தாச்சி விளையாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளோம். 2016ஆம் ஆண்டு முதல் வடமாகாண பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாச்சி விளையாட்டை நடத்துவதுடன் இதனை மாவட்டம், மாகாணம் என கொண்டு செல்லவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இந்த போட்டிகளை  பாடசாலைகள் மட்டத்திலும் அறிமுகம் செய்து நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

'முதலாலது தாச்சிச் சுற்றுப்போட்டியை நடத்தும் பொறுப்பை தாச்சி சங்கத்திடம் கையளித்து அதனை உரிய சட்;டதிட்டங்களுக்கு அமைவாக அவர்கள் நடத்தி எமக்கு பெறுபேறுகளை வழங்குவார்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X