Gopikrishna Kanagalingam / 2015 நவம்பர் 12 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், அநுராதபுரம் மத்திய கல்லூரி, முதலில் துடுப்பெடுத்தாடியது.
அவ்வணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் விக்கிரம 23 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில், கே. மதுசன் 5 விக்கெட்டுகளையும் ஜனார்த்தனன் 3 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணி, 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
சென். ஜோன்ஸின் யூடிற் 33 ஓட்டங்களையும் வினோசன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், அசங்க 4 விக்கெட்டுகளையும் நவின் பண்டார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 75 ஓட்டங்களால் பின்தங்கியிருந்த நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அநுராதபுரம் மத்திய கல்லூரி, 5 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி, வெற்றி தோல்வியற்ற முறையில் முடிவடைந்தது.
எனினும், முதல் இனிங்ஸில் முன்னிலை பெற்ற காரணத்தால், போட்டிக்கான புள்ளிகள், சென். ஜோன்ஸ் கல்லூரிக்குக் கிடைத்தன.
14 minute ago
43 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
54 minute ago