2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சங்கானைப் பிரதேச அணி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே இடம்பெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சங்கானைப் பிரதேச செயலக அணி மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று திங்கட்;கிழமை நடைபெற்ற ஆறு பேர் கொண்ட 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிப் போட்டியில் சஙகானைப் பிரதேச செயலக அணியும் நலலூர் பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன. 

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று சங்கானைப் பிரதேச செயலக அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இவ் அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 62 புள்ளிகளை பெற்றது.

இவ் அணிக்கு எஸ்.பானுப்பிரியா 30 ஓட்டங்களையும் கே.சுகன்யா ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நல்லூர் பிரதேச செயலக அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 29 ஓட்டங்களை பெற்றது.

இவ் அணிக்கு என்.கௌதமி 17 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

சங்கானைப் பிரதேச செயலர்; பிரிவைச்சேர்நத எஸ்.பானுப்பிரியா ஒரு ஓவர் பந்து வீசி 6 ஓட்டங்களுக்க ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகியாக சங்கானைப் பிரதேச செயலகத்தைச்சேர்ந்த எஸ்.பானுப்பிரியா தெரிவு செய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு மேற்படி போட்டியை நடத்தியிருந்தது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X