2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் யாழ்.பிரதேச செயலக அணி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)
 

வட மாகாண விளையாட்டுத் தினைக்களத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு, யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணி செம்பியனாகியுள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணியும் பருத்தித்துறை பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.

முதல் பாதி ஆட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணி 1:0 என்ற புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சுறுசுறுப்புடன் மோதிக்கொண்டன.
 
போட்டியின் இறுதியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணி 3:1 என்ற கோல் கணக்கில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியை வெற்றி பெற்று யாழ். மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.  


   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X