2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாகாண நிலை மெய்வல்லுநர் போட்டிகள்

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடத்தும்  பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண நிலை மெய்வல்லுநர் போட்டிகள்  சனிக்கிழமை (14) முதல் செவ்வாய்க்கிழமை 17  வரை நடைபெற உள்ளது.

செங்கலடி கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தலைமையில் உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டியில்  கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்,  மாகாண கல்வி அமைச்சர் விமலதீர திசாநாயக்கா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு. திருகோணமலை, கல்முனை, அம்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 17 கல்வி வலயங்களில் இருந்து 2300 மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .