2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மல்யுத்தத்தில் மட்டக்களப்பு வீரர்கள் சாதனை

Super User   / 2014 ஜூன் 18 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நொச்சிமுனை, சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர்கள்  தேசிய ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் சாதனைகளை படைத்து மட்டக்களப்புக்கு பெருமைசேர்த்துள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நுவரேலியா நகர உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் 84 கிலோகிராம் போட்டியில் எஸ்.ரொயிஸ்டின், 96 கிலோகிராம்  எடை போட்டியில் சேன் பல்தாசர் ஆகியோர் மூன்றாம் இடத்தினை பெற்று இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டியில் பிரதேச செயலக மற்றும் மாவட்ட, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டு இந்த சாதனையினை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனின் வழிகாட்டலில் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான வேலு.திருச்செல்வத்தினால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகம் கடந்த காலத்தில் மாகாண, தேசிய ரீதியில் பல வீரர்களை பிரகாசிக்கசெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாதனைபடைத்து மட்டக்களப்புக்கு பெருமைசேர்த்துள்ள இவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், உதவி ஆணையாளர் ரி.தனஞ்சயன், பொறியியலாளர் எஸ்.அச்சுதன் ஆகியோர் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.





   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .