2025 ஜூலை 09, புதன்கிழமை

மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை சம்பியன்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 16 வயதுப்பிரிவு கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய 'க்ரொஸ் வே இன் நோத்' வெற்றிக் கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை சம்பியனாகியது.

12 பாடசாலைகளின் அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மானிப்பாய் சர்வதேச ஏஞ்சல் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட திடலில் திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றது,
இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை அணி மோதியது.

ஆட்டத்தின் தொடக்கம் முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி முதல் மூன்று சுற்றுக்களையும் 09:06, 08:06, 09:06 என கைப்பற்றியது. எனினும் நான்காவதும் இறுதியுமான சுற்றில் யாழ்ப்பாணம் இந்து அணி வெகுவாக போராடியது. எனினும் அதற்கு ஈடுகொடுத்து ஏஞ்சல் அணியும் விளையாடியது. இதனால் நான்காவது சுற்று 11:11 என சமநிலையில் முடிவடைந்தது.

இறுதியில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி 37:29 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகியது. சுற்றுப்போட்டியின் தொடர் நாயகனாக யாழ்ப்பாணம் இந்து அணியின் கே.கீர்த்திகனும், இறுதிப்போட்டி நாயகனாக ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் ஜி.சஜீந்திராவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .