2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நூரளையில் உடற்பயிற்சி கூடம் திறந்துவைப்பு

George   / 2014 நவம்பர் 25 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு

நுவரெலியா விளையாட்டு கழகத்தில் நடைபெற்ற அருணா வெற்றிக்கிண்ணத்துக்கான ஸ்நூக்கர் போட்டியில் சமிந்த கொடிகார வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை எம்.டீ.பூசோ பெற்றுக் கொண்டதோடு மேசைப்பந்து போட்டியில் முதலாம் இடத்தை அநுர டீ.சில்வா பெற்றுக் கொண்டார்.

இதற்கான பரிசளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை மாலை நுவரெலியா விளையாட்டு கழகத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே போட்டியின் அனுசரனையாளர் எம்.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை மாநகர சபை முதல்வரினால் திறந்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .