Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட எல்லே விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.
இன்றைய விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றஸீன் தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டியின் நடுவர்களாக விளையாட்டு உத்தியோகத்தர் ஐ.எம்.கடாபி, எஸ்.எல்.சபுர்டின், ஏ.எல்.ஏ.றகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 14 எல்லே அணிகள் இன்றைய போட்டியில் கலந்து கொள்கின்றன.


3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026