Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக தியானதினத்தைமுன்னிட்டு, வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஐக்கிய நாடுகள் சபையில் டிச.20ஆம் திகதி , “உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான தியானம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து டிச.21ஆம் திகதியன்று உலகளாவிய நேரடி தியானம் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானத்தின்படி, டிசம்பர் 21ம் திகதி உலக தியான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலக ஆன்மிகத் தலைவரும் மனிதாபிமானத் துறையின் முன்னோடியுமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர், டிசம்பர் 21-ம் திகதியன்று உலக தியானத்துக்கு வழிகாட்டுகிறார். இந்த வரலாற்று நிகழ்வு தியானத்தின் மெய்யான நன்மைகளை அங்கீகரிப்பதோடு, ஆண்டுதோறும் கொண்டாடும் நிகழ்வாகமாறுகிறது.
இது உடல் ஆரோக்கியத்துக்கும், மனநலனுக்கும், மாற்றத்துக்கும், அமைதி மற்றும் ஒற்றுமையையை மேம்படுத்துவதில் தியானத்தின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய மிஷன், 2024 டிசம்பர் 20 அன்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் முதன்முறையாக உலக தியான தினத்தை நிகழ்த்துகிறது. இந்த நிகழ்வில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஒரு முக்கிய உரை நிகழ்த்தவிருக்கிறார். “உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான தியானம்” எனும் தலைப்பில் நடைபெறும் இந்த நினைவூட்டும் நிகழ்வு, முதலாவது உலக தியான தினத்தின் சிறப்பை குறிக்கிறது. தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. ஒரு முக்கியமான முன்னேற்றமாகும், என ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறியுள்ளார். மேலும் தியானம் ஆன்மாவை வளர்க்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது, மற்றும் நவீன சவால்களுக்கு தீர்வை வழங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த உரையின் முக்கிய அம்சங்கள் மன அழுத்த நிவாரணம் மற்றும் மோதலை தீர்க்கும் முயற்சிகளில் முன்னோடி என்ற புகழ்பெற்ற ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்தஐநாதலைவர்கள், தூதர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுடன் தியானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பார். டிசம்பர் 21ம்தேதி அன்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்வை நடத்துகிறார்.
உலக தியான தினத்தின் முக்கியத்துவம்: உலக தியானதினத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அங்கீகரித்தது, தியானத்தின் திறனை மிகச் சாதுர்யமாகக் காட்டுகிறது. உயர்ந்த மன அழுத்தம், சமூக அமைதியின் குறைவு, மற்றும் மக்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையிழப்பது போன்ற நவீன சவால்களை தியானம் தீர்க்கும் திறன் உள்ளது. ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 43 ஆண்டுகளாக தியானத்தின் நன்மைகளை 180 நாடுகளில் பரப்பியவர். மனம் தெளிவாகவும், உணர்ச்சி மிஞ்சாமலிருக்கவும், சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் இது மிகச்சிறந்த கருவியாகக் கருதுகிறார்.
உலகத்தின் பல இடங்களில் அமைதியை மேம்படுத்தும் முயற்சிகளில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தியானத்தின் ஆற்றல் பிரதிபலிக்கிறது. இலங்கை, ஈராக், வெனிசுலா மற்றும் கொலம்பியா போன்ற மோதல் நிறைந்த இடங்களில் அமைதியை ஏற்படுத்தவும், இந்தியாவில் 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி-ராமர் கோயில் மோதலில் புரிதலுடன் அமைதியை ஏற்படுத்தியதில் அவரது முக்கிய பங்கு குறிப்பிடத்தக்கது. நாடுகளின் எல்லைகள், கலாச்சாரம், மற்றும் மதங்களை தாண்டி தியானம் ஒரு சாதாரணமான தீர்வாக செயல்படுகிறது. உள்ளார்ந்த அமைதியையும் வெளியின செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, உலக அமைதிக்கான அடித்தளமாக தியானம் பயன்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago