Mayu / 2024 ஜூலை 24 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காப்பாற்றுவதற்காக, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கத்தியை காட்டி மிரட்டிய சந்தேக நபர் மற்றைய நபரை அழைத்துச் செல்ல முயன்ற வேளை கொழும்பு கிராண்ட்பாஸ் அரச வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஜீவந்த உட்பட பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த வீட்டை சுற்றிவளைத்து போதைப்பொருளுடன் சந்தேகநபரை கைது செய்ததையடுத்து, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளை தடுத்ததுடன், அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தும் தப்பிச் செல்ல முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago