2026 மார்ச் 16, திங்கட்கிழமை

காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Janu   / 2024 ஒக்டோபர் 17 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் புதிய எலுவங்குளம் ஜாலிய கிராமம் பகுதியில் வியாழக்கிழமை (17) அதிகாலையில்  காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த  முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர்   தோட்டமொன்றில் காவலாளியாக கடமை புரிந்து வந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X