Janu / 2024 ஜனவரி 31 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் தலைமையக பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்தை சேர்நத 22 வயதுடைய ஷனுக கிஹான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனுக்கு சிறைச்சாலையில் வைத்து ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள இளைஞனுடன் மேலும் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago