2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

டிப்பர் பல்டி அடித்ததில் இருவர் காயம்

Mayu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ தல்பிட்டிய பாலத்தருகில் இன்று (10) பிற்பகல் டிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டிப்பர் கவிழ்ந்து அதன் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த காரும் இவ்விரு வாகனங்களையும் கவனக்குறைவாக செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X