Janu / 2024 நவம்பர் 13 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொடகவெல, தொம்பகொல, எல்ல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த பாதுகாப்பற்ற பாலத்தில் இருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் புதன்கிழமை (13) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் , மல்வத்தை கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான 27 வயதுடைய நதிக நுவன் திலகரத்ன என்ற கொடகவெலயில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (1) இரவு சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கப்படுவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .