Mayu / 2024 ஜனவரி 04 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கிறேண்பாஸ் பொலிஸ் பிரிவிட்குற்பட்ட நவ கம்புர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 210 லீட்டர் ( 500 பேத்தல்கள் கசிப்பு ) சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ரூ.2 இலட்சத்து 223 பணத்துடன் 52 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (03) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கிராண்ட்பாஸ் பொலிஸ் தலைமைப் பரிசோதகர் எச்.எச்.ஹரிசனின் உத்தரவின் பேரில் பொலிஸ் குழுவினால் இந்த சட்டவிரோத போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மேலும் கைது செய்யப்பட்ட பெண் இன்றையதினம் மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கிறேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago