Sudharshini / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் வட இலங்கை சங்கீத சபையின் எற்பாட்டில், மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபையின் தற்பரானந்தன் அரங்கில் சற்குரு ஸ்ரீ தியாகராஜசுவாமிகளின் 168 ஆவது ஆராதனை விழா இன்று சனிக்கிழமை (21) நடைபெற்றது.
வட இலங்கை சங்கீத சபையின் தலைவரும் யாழ்ப்பாணம் கல்வி வலய கல்விப் பணிப்பாளருமான செ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை சங்கீத சபையின் உபதலைவர் கலாபூசணம் சு.கணபதிப்பிள்ளையும் ஆசியுரையை நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் இசை ஆராதனையை யாழ்ப்பாணத்தின் முன்னணி சங்கீத கலைஞர்கள் நிகழ்த்தினர்.
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago