Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
சமகால சூழலுக்கேற்ற படைப்புகளே இலகுவில் மக்களிடம் சென்றடைகின்றன. இதற்கு உதாரணமாக காண்டவதகனம் அமைந்துள்ளது என பேராசிரியர் எஸ்.மௌனகுரு தெரிவித்தார்.
பேராசிரியர் எழுதிய மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் நூல் இரண்டாம் பதிப்பு அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு அரசடி அரங்க ஆய்வு கூடத்தில் நேற்ற வியாழக்கிழமை மாலை (08) நடைபெற்றது.
இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'காண்டவதகனம் புதிய புதிய சமகாலக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இது சர்வதேச மேடையரங்கில் மேடை ஏறவிருப்பது அரங்க ஆய்வு கூட மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
கூத்து என்றால் கூவி ஆடுதல் எனப் பொருள்படும். மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் நூலானது மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஆற்றுகை வடிவங்கள், சடங்குகளின் அம்சங்கள், உலக நாடுகளில் காணப்படும் சடங்குகள், மட்டக்களப்பு சமூக அமைப்பு சடங்குகள், வடமோடி, தென்மோடிக்கூத்தின் பழக்கமுறை, மேடையமைப்பு மற்றும் உறவு முறைகள் உட்பட மட்டக்களப்பின் பாரம்பரிய சடங்கு முறைகள் தொகுக்கப்பட்டுள்ளன' என்றார்.
8 minute ago
16 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
27 minute ago