Kogilavani / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
டாக்டர் ஓ.கே.குணநாதன் எழுதிய, 'உயிர் உறிஞ்சி' டெங்கு விழிப்புட்டல் சிறுவர் கதைப் புத்தக வெளியீடு, நாளை சனிக்கிழமை (29) காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மக்கள் வங்கி நடத்தும் சர்வதேச சிறுவர் தின விழாவிலேயே இக் கதைப் புத்தகம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
முகாமையாளர் எஸ்.சரவணபவன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் விழாவில், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு வலயக்ககல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிராந்திய தொற்றுநோயாளர் பிரிவு வைத்திய கலாநிதி தர்சினி காந்தரூபன், உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளியீட்டுரையை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் து.கௌரீஸ்வரன் ஆற்றவுள்ளார்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025