Kogilavani / 2016 மார்ச் 02 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகம், யாழ்.திருமறைக் கலாமன்றம், கொழும்பு அருஸ்ரீ கலைக்கூடம் ஆகியன இணைந்து வழங்கும் மகளிர் தின சிறப்பு பரத நாட்டிய நிகழ்வான 'நாத நிருத்தியம்' எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவிலிருந்து வருகை தரும் பரதநாட்டியக் கலைஞர்களான ஸ்ருதி மற்றும் பாஷ்வனாத் உபாத்யே ஆகியோர் இந்த பரதநாட்டியத்தை வழங்குகின்றனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே கலந்துகொள்கின்றார்.
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026