2025 ஜூலை 23, புதன்கிழமை

ஸ்ரீமதி. காந்தினி கிஷோனின் இசைக்கச்சேரி

Kogilavani   / 2011 ஜூன் 24 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீமதி. காந்தினி கிஷோனின் இசைக்கச்சேரி நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கராப்பிள்ளை மண்டபத்தில்  இடம்பெற்றது.

இலங்கையின் சிறந்த பக்கவாத்தியக் கலைஞர்களான எஸ் திபாகரன் (வயலின்), எஸ். கமலதாஸ் (மிருதங்கம்), வீ.ஜம்புநாதன் (கடம்), ரட்ணம் ரட்ணதுரை (மோர்சிங்) ஆகியோர் இவரது இசைக்கச்சேரிக்கு மேலும் அணிசேர்த்தனர்.

இலங்கையின் புகழ் பூத்த மூத்த இசைக் கலைஞரான அமரர் இசைப்புலவர் ந.சண்முகரத்தினத்தின் பேத்தியும் கலாசூடாமணி சண்முகராகவனின் புதல்வியுமான இவர், சென்னையில் இசைக்கலை மணி இசையாசிரியர் பயிற்சி (Diploma), B.A. இசைப்பட்டதாரி ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இசைக் கச்சேரியை கேட்டு ரசிக்க பெருந்திரளானோர் அரங்கில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(Pix By :- Indraratna Balasuriya)


  Comments - 0

  • Ravi Muthali Sunday, 31 July 2011 08:47 AM

    வை தேயர் இஸ் நோ சின்ஹல பானர் இன் தி பக்க்க்ரௌந்து ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .