2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் கட்புல நர்த்தனம் ஓவிய சிற்ப கண்காட்சி

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

 'கட்புல நர்த்தனம்' எனும் பெயரில் இரு கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவிய, சிற்பக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு கொலட் லேன், இலக்கம் 9 இல் அமைந்துள்ள அரங்க ஆய்வு கூடத்தில் ஆரம்பமானது.

பேராசிரியர் மௌனகுரு தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வின் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி க.பிரேமகுமார் கலந்துகொண்டார்.

சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகமாக இணைக்கப்பட்டதன் பின்பு அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட கட்புல தொழில்நுட்பத்துறையின் முதல் தொகுதி மாணவர்களே ரமணனும் ரினுஜாவும் ஆவர்.

இம்மாணவர்களின் ஆக்கங்களே காட்சிப் படுத்தப்பப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .