2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'வேர்கள்' சிறப்பு மலர் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா

ஓட்டமாவடி பிரதேச செயலகம் சிறுவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு வருடா வருடம் வெளியிடும்  'வேர்கள்' சிறப்பு மலர் வெளியீட்டு விழா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார். அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேசசபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஸ்ஹர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0

  • musdeen Thursday, 10 January 2013 06:47 AM

    வாழ்த்துக்கள் என்றும்...
    அன்புடன்
    முஸ்டீன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X