2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

“அரசியலுக்கு வர மாட்டேன்”

Janu   / 2026 மார்ச் 25 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எமது சகோதர பத்திரிக்கையான லங்காதீபவுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தான் நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்தாலும், ஒரு சட்டத்தரணியாக நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து முன்னிற்பதாகவும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

"இவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள். எல்லாவற்றையும் ஒரு வேடிக்கையாக மாற்றியுள்ளனர்."  எனவும் அவர் கூறியுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .