2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உக்ரேன் நாட்டு பரத நாட்டிய தாரகையின் நடன நிகழ்வு

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


- மொஹொமட் ஆஸிக்

உக்ரேன் நாட்டை சேர்ந்த பரத நாட்டிய தாரகை கன்னா ஸ்மிர்னோவா  நடத்திய பரத நாட்டிய நடன நிகழ்வு நேற்று மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

மத்திய மாகாண இந்து மாமன்றம், மற்றும் இலங்கை இந்திய கலாசார சங்கம் (கல்யானி சிலிக்கா) ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்த இக் கலை நிகழ்வுக்கு கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் விநோத் பாசி, மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் தலைவர் டீ.சிவ சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்;தியாவில் பரத நாட்டிய நடன கலையை கற்றுக் கொண்டுள்ள உக்ரேன் நாட்டை சேர்ந்த கன்னா ஸ்மிர்னோவா உலகின் பல நாடுகளில் 35 க்கும் மேற்பட்ட நடன நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .