2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கதீர் எழுதிய 'மணல் நதி' வெளியீடு

Super User   / 2014 பெப்ரவரி 13 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை 'அநுசரி இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் கதீர் எழுதிய 'மணல் நதி' கவிதை தொகுதி வெளியீடு நாளை அந்தி 4.00 மணிக்கு தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் கல்முனை சபா வரவேற்பு மண்படத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் எஸ்.எல்.எம். ஹனீபா, மன்சூர் ஏ. காதிர், எஸ்.கருணாகரன், மு.மு.மு. பாசில், மு.நபீல், ஏ.பீ.எம்.இத்ரீஸ், எஸ்.றமேஸ், ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் மற்றும் முஹம்மத் றனூஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு ஆய்வாளர்கள், இலக்கிய படைப்பாளர்கள், வாசகர்கள் சமூக நலன்விரும்பிகள் என பலர் அழைக்கப்பட்டுள்ளனர். இத்தொகுதி ஏற்கனவே இந்தியவில் உள்ள முன்னணி வெளியீட்டகங்களில் ஒன்றான கருப்புப் பிரதிகள் வெளியீட்டகத்தினால் வெளியீடு செய்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை கல்முனையில் வெளியீடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X