2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இயந்திர படகுப்பாதை சேவை மீண்டும் ஆரம்பம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட கோறளை பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திகிலிவெட்டை கிராமத்திற்கான இயந்திர படகு சேவை போக்குவரத்து  மீளத்திருத்தியமைக்கப்பட்டு வியாழக்கிழமை(24) அன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சந்திவெளி பகுதியில் இருந்து கிரான் பிரதேச செயலக திகிலிவெட்டை கிராமத்திற்கு இயக்கப்பட்ட இப்பாதையில் ஏற்பட்ட பழுதுகள் காரணமாக கடந்து 8 மாதமாக போக்குவரத்து சேவை இயக்கப்படவில்லை. பிரதேச சபையினால் 22 லட்சம் ரூபாய் நிதிப்பங்களிப்பில் முலம் பாதை மீளத்திருத்தியமைக்கப்பட்டது

எனவே, குறித்த பகுதி மக்கள் நீண்ட தூரம் பயணித்து நகர் புறத்தை சென்றடைய வேண்டிய தேவை இருந்தது. குறித்த பாதையை திருத்தி அமைக்கப்பட்டதை தொடர்ந்து

 பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் க. பார்த்தீபன் மற்றும்  கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திரு. ராஜ்கீரன்   முன்னிலையில் வியாழக்கிழமை (23) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

. விஜயரெத்தினம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X