2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

கசிப்பு போதைப்பொருளுடன் பெண் உட்பட 11 பேர் கைது

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட  11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,தாழங்குடா, புதுக் குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி,கிரான்குளம்  உட்பட பல இடங்களில் இத் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டது. மறைத்து வைக்கப்பட்ட நிலையிலும், விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் ஒரு பெண் உட்பட பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் . காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .