2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

குருக்களிடம் கைவரிசை அடையாளம் காட்டவும்

Freelancer   / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, அரசடி சந்திப் பிள்ளையார் ஆலைய குருக்களின் அலைபேசி, 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் திறப்பு கோர்வை, ஆகிய திருடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

வழமையைப் போல சனிக்கிழமை (08) ஆறு மணிக்கு பூஜைகளை முடித்துவிட்டு, 7 மணியளவில் அறைக்குச் சென்றுபார்த்தபோது, மேலே குறிப்பிட்ட பொருட்கள் காணாமல் போயிருந்தமையை அவதானித்துள்ளார். அதன்பின்னர், சிசிரிவி கமெரா காட்சிகளை ஆராய்ந்துள்ளார்.

அதில், இளைஞன் ஒருவன், முகத்தை மறைக்க  முககவசம் அணிந்தவாறு  அறையினுள் சென்று பொருட்களை திருடிக்கொண்டு வெளியேறியமை ​தொடர்பிலான காட்சிகள் பதிந்துள்ளன. அவைத்தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில் குருக்கள் முறைப்பாடு செய்தார்.

இந்தத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

                                                                                                                                கனகராசா சரவணன்
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .