Janu / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடையாக 1.75 மில்லியன் பெறுமதியான 229 உள்விழி வில்லைகள் (Intraocular Lenses) வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (21) இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன், மற்றும் கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.என். நிரோஷன் ஆகியோரிடம் இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினுடைய தலைவர் ஏ.டி. கஜன்குமார் மற்றும் ஸ்ரீ சத்ய சாயி நிறுவன உறுப்பினர்களினால் இதனை வழங்கப்பட்டுள்ளது.
வி.ரி.சகாதேவராஜா

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .