2025 நவம்பர் 19, புதன்கிழமை

பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் 3 வது வருட பூர்த்தியை ஒட்டி வியாழக்கிழமை (14) அன்று பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம் இடம் பெற்றது. 

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் கலைவாணி தயாபரன் தலைமையில் பொத்துவில் கனகர் கிராமப் பகுதியில் இடம்பெற்ற இப் 14 வது நாள்,   பலர் பதாகைகள் போராட்டத்தில்   ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தக் கோரி இப் போராட்டம் நடைபெற்றது. மகளிர் அமைப்பினர் மற்றும் பொத்துவில் கனகர் குடியேற்ற கிராமப் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அங்கு  ஊடக வெளியீடு ஒன்றும் வெளியிடப்பட்டது.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X