2025 ஜூலை 12, சனிக்கிழமை

அநுரகுமார திஸாநாயக்கவிடம் இரண்டாவது தடவை சிஐடி விசாரணை

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று இரண்டாவது தடவையாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 1.30 மணிநேரம் அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல்ப் பிரச்சாரங்களுக்கு நிதி கிடைத்தமை தொடர்பில் அநுரகுமார  திஸாநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு எதிரான  செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .