2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த கோரிக்கையை  அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை  நவநீதம்பிள்ளை நினைவுகூர வேண்டும்  எனவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க  டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நவநீதம்பிள்ளை நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது .



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .