2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

”தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்”

Simrith   / 2024 மார்ச் 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று தெரிவித்தார்.

இந்த நிலைமை சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில் 6.2 மில்லியன் தெருநாய்கள் காணப்படுவதாகவும், இது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சுற்றுலாப் பகுதிகளிலும் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியம் என்றார்.

விலங்குகளுக்கு ஏற்படும் தீங்குகளை குறைப்பதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தென்னக்கோன், விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எல்லாவற்றிற்கும் முன்னதாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .