2026 மார்ச் 09, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி வர்த்தகர் பலி

Freelancer   / 2024 மே 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் புத்தளம், முந்தல் பிரதேசத்தில் உள்ள தனது கால்நடைப் பண்ணையில் மின் இணைப்புக்களைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்சார இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .