Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 05 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அனைத்து இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி பிரார்த்திக்கும் முழு இரவு பௌத்த சமய வழிபாடும், சுதந்திர சதுக்கத்தில் இன்று (05) மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும்.
அதிவணக்கத்தக்குரிய தேரர்கள் உள்ளிட்ட ஆயிரம் தேரர்களின் பங்கேற்புடன் இந்த பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.
இந்த புண்ணிய நிகழ்வில் பங்குபற்றும் பௌத்த துறவியர்கள், கொழும்பு 07, ஆர்.ஜீ, சேனாநாயக்க மாவத்தையிலுள்ள ஸ்ரீ சம்புத்தாலோக்க விகாரையிலிருந்து இன்று மாலை 5 மணியளவில் ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்துக்கு வரவுள்ளனர்.
இந்த பிரார்த்தனையில் பங்குபற்ற விரும்பும் பக்தர்கள், வெள்ளை ஆடையுடன் மாலை 5 மணிக்கு முன்னதாக சுதந்திர சதுக்கத்துக்கு வருகை தருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago