Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமீலா நஜ்முதீன்)
நாட்டில் வந்திறங்கியபின் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறையை சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு தவிர்ந்த ஏனைய நாட்டினருக்கு செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் நீக்கப்படும் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.சி. பெரேரா டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதனால் சுமார் 70 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் இலங்கைக்கு வரும் முன்னரே கொழும்பிலுள்ள குடிவரவுத் திணைக்களத்தில் அல்லது வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் விசா பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.
எனினும் எந்தவொரு நாடும் வந்தடைந்தவுடன் விசா வழங்கும் திட்டத்தை இலங்கையர்களுக்கு வழங்கினால் அந்த நாட்டினருக்கு இலங்கையும் அவ்வாறு விசா வழங்கும் எனவும் அவர் மேலும் கூறினார். (DM)
asaf Saturday, 28 August 2010 12:56 AM
நல்ல முடிவு.பின்பற்றவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025