A.P.Mathan / 2012 ஒக்டோபர் 08 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

திவிநெகும சட்ட மூலத்தினூடாக - மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகவும், கிராமிய மட்டத்திலான அபிவிருத்திகள், மாகாண மட்டத்திலிருந்து மத்திய அரசின் கைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதே விமர்சனங்களை முன்வைத்து, கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு வாக்களித்துள்ளது..jpg)
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு கிழக்கு மாகாணசபையில் கால அவகாசம் கோருவோம் என்றார் மு.கா.வின் செயலாளர் ஹசனலி. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. அந்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஏழு பேரும் வாக்களித்து விட்டனர்.
திவிநெகும சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணத்தில் ஏன் ஆதரித்தீர்கள் என்று கிழக்கு மாகாண மு.காங்கிரஸ் அமைச்சர் மன்சூரிடம் கேட்டோம். 'திவிநெகும சட்ட மூலம் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொன்றாக இருந்தால், அது குறித்து கட்சித் தலைமை எமக்கு அறிவித்திருக்கும். ஆனால், அவ்வாறான அறிவுறுத்தல்கள் எவையும் தலைமையிடமிருந்து எமக்கு கிடைக்கவில்லை. அதேவேளை, திவிநெகும சட்ட மூலத்தினைப் படித்துப் பார்த்த போது அதில் சமூகத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் எவையும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் அந்த சட்ட மூலத்தினை ஆதரித்தோம். இவை தவிர, கிழக்கு மாகாணசபையில் அரசும், மு.கா.வும் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் அமர்விலேயே அரசுக்கு எதிராக வாக்களிப்பதென்பது தர்ம சங்கடமானதொரு விடயமாகவும் இருந்தது' என்று அவர் பதிலளித்தார். kalam Monday, 08 October 2012 03:16 PM
சபாஷ் நல்ல கட்டுரை.
Reply : 0 0
தம்பாளை பாபு Monday, 08 October 2012 04:22 PM
முஸ்லிம்களின் தலையை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மொட்டைகத்தியால் வழிக்க முனைகின்றது .மொட்டைக்கத்தியால்
தலையை வழிக்க முனையும்போது ஏற்படும் வேதனையும், இரத்தப்பெருக்கும் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களது பக்கற்றுகள் நிரம்பினால் போதும் .
Reply : 0 0
rima Monday, 08 October 2012 05:31 PM
மு.காங்கிரஸ் சிறிய எலும்பு துண்டுக்கு விலை போனார்கள். இவர்கள எப்படி மு.கா. உறுப்பினர்கள் என்று சொல்வது?
Reply : 0 0
Mohammed Hiraz Monday, 08 October 2012 07:04 PM
சட்ட மூலத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் வந்திடப்போவதில்லை. ஏன் வீண் கவலை? எம்மை பற்றி கவலை இல்லாதோரை பற்றி ஏன் நம் அரசியல்வாதிகள் அலட்டிகொள்ளனும்???
Reply : 0 0
meenavan Tuesday, 09 October 2012 01:50 AM
மு.கா. தலைமை குருடர்களுக்கு யானையை காட்டுகிறது... அது வெள்ளையா கறுப்பா என்பது அவர்களுக்கே தெரியாது....? என்றாலும் அரசியல் அதிகாரம் உள்ள ஓரிருவர் பக்கட்டுகள் நிறைவதை அனுமானிக்க முடிகிறது.
Reply : 0 0
aj Tuesday, 09 October 2012 07:44 AM
ஹக்கீம் என்றாலே தாவல்களும் பிரட்டல்களும் பித்தலாட்டங்களும் இப்படி நாடகம் மற்றும் கூத்துகளுக்கும் தானே... இதில் அதிசயப்பட ஏதும் இல்லை...
Reply : 0 0
Najeem.A.C.A. Tuesday, 09 October 2012 09:46 AM
திவிநெகும சட்டமூலத்தினால் நமது சமூகத்துக்கு ஏற்படும்
பாதிப்பு என்ன என்று உங்களுக்கு தெரியுமா கட்டுரையாளர்
அவர்களே?
Reply : 0 0
ஊர்க்குருவி Tuesday, 09 October 2012 05:42 PM
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மட்டுமே சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார். ஏனெனில் அவரினதும், அவருடைய சொந்த தொழில் சம்மந்தப்பட்ட சில நடவடிக்கைகளிலும் இருந்த தடைகளை அகற்றி அதிலும் வெற்றி பெற்றுள்ளார். நாம் இவருக்கு வாக்களிப்பதும், இவர் எமது பா.உ, மா.ச, மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களையும் ஏமாற்றுவதே இவருடைய தற்கால நடவடிக்கைகளாகும். " இருப்பவன் சரியாக இருந்தால் சிரைப்பவன் நன்றாகச் சிரைப்பான்". இன்ஷா அல்லாஹ் எமது பொறுமைக்கு இறைவன் நிச்சயம் தீர்வுத்தருவான்.
Reply : 0 0
saj Tuesday, 09 October 2012 06:35 PM
திவிநெகும சட்டமூலத்தினால் நமது சமூகத்துக்கு ஏற்படும்
பாதிப்பு என்ன என்று விலக்குக.
Reply : 0 0
naleem Wednesday, 10 October 2012 05:36 AM
முஸ்லிம்...
Reply : 0 0
Nazeem Wednesday, 10 October 2012 09:51 AM
இனியாவது கண் திறவுங்கள் கிழக்கு முஸ்லிம்களே!
Reply : 0 0
Mulla Thursday, 11 October 2012 07:28 AM
கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் இல்லை என்றால், அந்த கிழக்கு மாகாணசபை எதுக்கு. நாம் ஏன் வரிந்து கட்டிக்கொண்டு வாக்களித்தோம்.
Reply : 0 0
Mulla Thursday, 11 October 2012 07:33 AM
அடுத்த தேர்தலில்
"ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்தான்.. "
பாட்டை போட்டதும் நாம்
வோட்டை போட்டிடுவம், பிறகு நாம்
குத்துதே குடையுதே என்று திரியனும்.
பாட்டை போட்டதும் நாம்
வோட்டை போட்டிடுவம், பிறகு நாம்
குத்துதே குடையுதே என்று திரியனும...')">Reply :
0
0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .